திருவள்ளுவர் ஆண்டு உ0௩௯, துலை, க ( 17 - 10 - 2008 ) திங்கள் மின்னிதழ்ஆண்டு : க இதழ் : ௫

ஈழத்துப் பரணி - பாவலர் முவ.பரணன்

அலைநெளி முடியே அவிழ்ந்தாலும் ஆடையுஞ் சிறிதே குலைந்தாலும்
கொலைச்சின விழியே இமைத்தாலும் கூர்வாள் எதிரியின் மேற்போக்கோம்
23
என்றதொல் படையொழுங் குள்ளவராம் எதிரிக்கும் இரங்கும் மாண்பினராம்
நின்றவெந் தமழரோ நிலைகெடினும் நீக்குதல் இல்லாப் படைமரபார்!
24
படைமறம் செருக்காம் என்பதனைப் பதடியச் சிங்களன் அறிவானோ?
அடைந்தில் உள்ளே கிடப்பாரை அடக்கி அழித்தோம் என்பதுவாய்
25
வான்படை கொண்டே சிங்களவன்வதவதவென்றே குண்டுகளை
தேன்மொழி யாரிளம் பிள்ளைகள்மேல் செத்தொழி வீரென வீசுகிறான்
26
எதிரில் வந்தே எதிரியென எதிரும் மறமம் உடையவனா
குதிராய் உடலை வைத்தென்ன குறைகள் கொட்டத் தானுதவும்
27
புலிப்படை எதிரே சிங்களவன் போர்செயும் நோக்கொடும் வருவானோ?
மலியும் வகையிற் படைவீரர் மண்டிக் கிடந்தே என்பயனோ?
28
தரையில் கடலில் வானத்தில் தாக்கும் முறையே புரியாமல்
அரையாய்க் குறையாய்க் கற்றதனால் அடுதொழில் அறியபா தழிகின்றான்!
29
உலகின் பற்பல நாடுகளுக் கோடிப் போயே பயிற்சியென
பலவுங் கற்றோம் எனவந்தே படைமுன் நின்றே சாகின்றான்
30
இசுரேல் சீனா பாக்கித்தான் எவ்வெந் நாடு கொடுத்தாலும்
பொசுங்கிச் சாகும் சிங்களவன் பொறிகள் இயக்க அறியானே
31
இந்திய நாட்டின் அரசவர்க்கே இரேடார் கருவிகள் தந்தனவாம்
எந்தக் கருவி கொடுத்தாலும் எப்படிப் பயிற்சி அளித்தாலும்
32
தாமே உண்மை அறிவினராம் தாக்கும் உத்தி அறிந்தவராம்
ஏமாப் புணர்ந்த புலியினரை இழிஞன் சிங்களன் வெல்வானோ?
32
தரையின் தொடர்பாம் இலங்கையிலும் தரங்கம் பாடும் கடல்களிலும்
புரைசல் மிக்க சிங்களவர் புலம்பத் தாக்கும் புலிகளைப்பார்!
32

(தொடரும்)

பாவலர் முவ. பரணன், திருச்சிரப்பள்ளி, தமிழ்நாடு