|
முனைவர்
இரா.திருமுருகன்
|
ஆசிரியவுரை
தமிழ் மாணாக்கர்களுக்கு முழுத்தமிழைக் கற்பிக்கும் முயற்சிகள் - முனைவர் இரா. திருமுருகன்

இன்றைய கல்விநிறுவனங்களில் தமிழ்பயின்று தமிழ்ப்புலவர், தமிழில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்களைப் பெற்றுத் தமிழ்ப்பேராசிரியர்களாகவும், விரிவுரையாளர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணிபுரிவோர்க்கு, தமிழின் ஒரு கூறான இயற்றமிழ் அறிவுமட்டுமே உள்ளது. மற்றக்கூறுகளான இசைத்தமிழ், நாடகத்தமிழ்கள்பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியவில்லை.
அரைகுறைத் தமிழறிவு பெற்ற அவர்களால் தங்கள் மாணாக்கர்க்கு எப்படி முழுமையான தமிழைக் கற்பிக்கமுடியும்? இசைத்தமிழ் நாடகத்தமிழ இலக்கியங்களையும் இயற்றமிழ் இலக்கியங் களாகவே கருதும் அவர்களால் எப்படிச் சந்த வண்ணச் சிந்துப்பாக்களின் இலக்கணங்களைக் கற்பிக்கமுடியும்? இவர்களிற் சிலர் யாப்பிலக்கண நூல்களே இயற்றுகிறார்கள். அவற்றில் இசைத்தமிழ்ப் பாக்களை இயற்றமிழ்ப்பாக்களின் அளவுகோல்களைக் கொண்டு அளந்து பெரும்பிழை செய்கிறார்கள். இவர்களிற் சிலர் இலக்கியம் படைக்கிறார்கள். அவற்றில் இசைத்தமிழ்வகைப் பாக்களைப் பிழை மலிய எழுதுகிறார்கள். இன்றைய பெரும்பெரும் பேராசிரியர்களும், பெயர்போன பாவலர்களும் புழ்பெற்ற படைப்பாளர்களும் இதில் அடங்குவர். இவற்றையெல்லாம் சான்றுகளுடன் எடுத்துக்காட்டி ஒரு நூலே எழுதமுடியும். இவற்றுக் கெல்லாம் என்ன காரணம்?
கட்டுரைகள்
எழுத்துச் சீர்திருத்தம்: வரலாறும் வருங்காலமும் - நா.நந்திவர்மன் பொதுச்செயலர்: திராவிடப்பேரவை
எழுத்துச்சீர்திருத்தம் பனை ஓலையில் எழுதப்பட்ட காலத்திலும் நிகழ்ந்தது. அச்சு இயந்திரங்களும் தட்டச்சும் பயன்பாட்டுக்கு வந்த நேரத்திலும் தேவப்பட்ட. தந்தைப் பெரியார் துணிந்து கருத்தை வெளியிட்டார், நடைமுறையும் படுத்தினார். அதனை மருதூர் கோபாலமேனன் இராமச்சக்திரன் ஆட்சி ஆணை பிறப்பித்து வழக்காற்றில் கொணர்ந்தது.
இன்று கணினிகளின் காலம். கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில் ஏற்பட்டச் சிக்கல்களுக்கு தீர்வு தேடப்பட்டது. யுனிகோடு அமைப்பின் வழி உலக மொழிகளின் எழுத்துகளுக்கு குறியீடுகள் ஒதுக்கப் பெற்றன. எந்த மொழி எழுத்துகள் குறியீட்டு மொழியாக எளிதில் சிக்கலின்றி மாற்றம் செய்யப்படுமோ அந்த மொழித் தகவலை உலகின் பிற மொழிகளுக்குப் பெயர்ப்பு செய்வது எளிது. கருவியே மொழியாக்கம் செய்து தரும். அந்த இலக்கு நோக்கித் தமிழ் நடையிடும் காலத்தில் பாவலர் செம்பியன் அறிவியல் தமிழின் ஆக்கத்திற்கு தடையாக உள்ளவற்றை அகற்ற எண்ணினார். பிற மொழி எழுத்துகளை இரவல் பெறாமல் குறியீடுகள் சேர்த்து எம்மொழி ஒலியையும் தமிழில் எழுதிக் காட்ட முடியும் என்ற கருத்தை முன் மொழிந்தார். அதயும் அவர்க்கு முன்பு எழுத்துச் சீர்த்திருத்தம் கருத்தாக்கம் பெற்ற வரலாற்றையும் பதிவு செய்யத் துவங்குகிறேன். கணினிக்கும் எழுத்துச் சீர்திருத்தம் கட்டாயம் தேவை, அறிவியலுக்கும் தேவை. எனவே தொடரட்டும் விவாதம்! தீர்வுகள் தேடிப் புறப்படுவோம்! தெளிதமிழை உலக மொழி ஒலி எல்லாம் உள்வாங்கிய ஒளிர்தமிழாக மாற்றம் செய்வோம்
திருக்குறளில் சமயம் (பகுதி-1) - முனைவர் க.நெடுஞ்செழியன்
திருக்குறள் உலகப் பொதுமறை; சமயங் கடந்த வாழ்வியல்; மனிதம் வளர்த்த அறிவுப் பண்ணை. இதன் பெருமைகளை,
அது (திருக்குறள்) ஒருங்கிசைவும் செம்மை நலமும் வாய்ந்த கலைப் பெட்டகம். அதனுடைய ஆசிரியர் (திருவள்ளுவர்) அரசனையோ, குடிமகனையோ மதகுருவையோ விளித்து அதை இயற்றவில்லை. மனிதனுக்காக - மனிதனுடைய நலமிக்க வாழ்க்கைக்காக - மனிதனை முன்னிருத்தித் தம் மாண்புமிக்க நூலினை அவர் இயற்றியுள்ளார். மனிதனைப் பாடுகின்ற பொழுது சட்டத்தை வகுத்தளிக்கும் சட்ட வல்லுநராகவோ, வழிகாட்டும் தொலை நோக்காளராகவோ அவர், தம்மைக் கருதவில்லை! ஆனால் மனிதனுடைய நலனை நாடுவோராகவும், நண்பராகவும் ஆசிரியராகவும் அவர் அன்போடும் பண்போடும் தம் கருத்துக்களைத் தெரிவிக்கின்றார்.
என சோவியத் நாட்டு அறிஞர் அலெக்சாண்டர் பியாதிகோர்சிகி கூறியுள்ள கருத்தை மேற்கோள் காட்டி விளக்குவார். அறிஞர் க.த. திருநாவுக்கரசு.
சங்க இலக்கிய ஈடுபாட்டில் மலைபடுகடாம் ஆராய்ச்சியும் என் களப்பணிப் பட்டறிவுகளும்... - முனைவர் மு.இளங்கோவன்

மலைபடுகடாம் உரையைக் கற்றபொழுது பர்வதமலை,திரிசூலகிரி என்னும்பெயர்கள் அம்மலைக்கு உண்டு என்பதை அறிந்திருந்தேன். பர்வதமலை பற்றி ஒரு நூல் உ.வே.சா.நூலகத்தில் இருப்பதை நண்பர்கள் வழி அறிந்தேன். அதனைப் பார்க்க உ.வே.சா.நூலகம் சென்றேன்.என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் அந்நூல்களைப் பார்க்க ஆவன செய்தார்கள்.ஆய்வுக் குறிப்புகள் பலவற்றையும் சொன்னார்கள்.அங்கு வந்த சில அன்பர்கள் பர்வத மலை பற்றியும் அம் மலைப் பயணம் குறுவட்டில் விற்கிறது எனவும் தெரிவித்திருந்தனர்.பொதிகைத் தொலைக்காட்சியில் அம் மலைப் பயணம் காட்டப்பட்டது என்பதும் அறிய நேர்ந்தது.காஞ்சிபுரத்தில் அக் குறுவட்டுக் கிடைக்கும் என்ற விவரமும் தெரியவந்தது.
வேலூர் சார்ந்த தமிழ்ப்புலவர்கள், மூத்த தமிழறிஞர்களைக் காணும் பொழுதெல்லாம் நவிரமலை பற்றியே என் பேச்சு இருக்கும்.வேலூர்ப் பேராசிரியர் பட்டாபிராமன் அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு இருந்தது.பேராசிரியர் அவர்கள் பல அரசுக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள்.மொழிபெயர்ப்பு வேலைகளில் கவனம் செலுத்தியவர்கள். மொழிபெயர்ப்பு கு றித்த நூல் எழுதியவர்கள்.அவர் மாணவர் ஒருவர் பாலாசி என்பவர் அருணகிரிமங்கலம் என்னும் ஊரில் இருப்பதையும் அவர் மலைப் பயணத்திற்கு உதவுவார் எனவும் பேராசிரியர் கூறியிருந்தார்கள்.பாலாசி அவர்களின் வழியாக நவிரமலையைக் கண்டு மகிழலாம் என்னும் நினைவில் பலநாள் கடந்தன.
அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர - பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா
ஓர் அரசின் முதற் கடமை குடிமக்களின் உயிருக்குப் பாதுகாப்பாக அமைவதுதான். சட்டமும் ஒழுங்கும் அதற்காகவே அமைந்துள்ளன. மக்கள் வாழ்க்கையில் உயிர் பெற்றிருக்கும் இடம் மிக மிகப் பெரிது. ஓர் உயிர் நீங்குவதால் ஏற்படும் துன்பத்தைப் பணக்காரர்களை விட ஏழை எளிய மக்களே மிகுதியாக உணர்கின்றனர். தன் உழைப்பைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றும் குடும்பத் தலைவனை நம்பித்தான் அக் குடும்பமே இருக்கின்றது. அவன் இறந்துபோனால் குடும்ப உறுப்பினரின் வாழ்க்கை அடியோடு சீர்குலைகின்றது. கணவனை இழந்த ஏழை மனைவி, தந்தையை இழந்த சின்னஞ்சிறு குழந்தைகள் எவ்வளவு பெரிய இன்னல்கட்கும் அல்லல்கட்கும் ஆளாகின்றனர்!
அரசு என்ற ஒன்றை மக்கள் அமைத்துக் கொண்டதே தங்கள் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பை அரசு வழங்கவேண்டும் என்பதற்காகத்தான். உரூசோ என்ற பிரெஞ்சு அறிஞரின் கருத்துப்படி மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே அமையும் ஒப்பந்தம்தான் அரசு. மக்கள் அரசுக்கு அடங்கி நடக்க வேண்டும்; அரசு மக்களின் உயிரையும் உடைமையையும் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அந்த ஒப்பந்தம். அரசு மக்களின் உயிரை, உடைமைகளைக் காப்பாற்றத் தவறினால் ஒப்பந்தம் உடைந்து விட்டது என்பதே பொருள். தங்கள் உயிரையும் உடைமைகளையும் காக்கத் தவறிய அரசை மக்கள் மதிக்கத் தேவையில்லை.
உலகமயமாதலின் தாக்கத்திலிருந்து தமிழினத்தை மீட்பது எவ்வாறு? - 4
ஊடகங்களும் மின்வெளியு
"உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும்!" என்னும் வள்ளலாரின் விண்ணப்பத்திலுள்ள 'உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுதல்' என்னும் தீமையை முழுவதுமாகக் கடைப்பிடித்தலையே தம் உயிர்க் கோட்பாடாகக் கொண்டு செயல்படுபவை இன்றைய தமிழ் ஊடகங்கள். இல்லையென்றால், ஓராண்டுக்கு ஓராயிரம் கோடி உரூபாக்களைக் குறிப்பிட்டதோர் அலைவரிசைக் கட்டமைப்பினால் அள்ள முடியுமா?
தமிழர்களில் பலர் மொழி-இன உணர்வில்லாதவர்கள் என்ற குற்றச்சாற்றைத் தமிழ்ப்பணியாளர்கள் மக்கள்முன் வைப்பது சிலருக்கு வழக்கமாக உள்ளது. 'ஆனந்த விகடன்' கிழமையிதழ் அண்மையில் மேற்கொண்டதொரு கருத்துக் கணிப்பின்படி, அக்குற்றச்சாற்று தவறானது என்பது உறுதியாகியுள்ளது. காசுசேர்க்கும் நோக்கம் மட்டுமே கொண்ட வழிகளில், பெரிய - சிறிய திரைப்படங்கள்/தொடர்கள், அவற்றுள் நடித்துக் காசுதிரட்டும் நடிகையர்/நடிகர் குறித்தே நாள்முழுவதும் பார்வையாளர்களின் மூளைகளில் கருத்தியல்/படிமத் திணிப்பைத் தொடர்ந்து திட்டமிட்டு நடத்தும் ('மக்கள் தொலைக்காட்சி' நீங்கலாக) இன்றைய தமிழ் ஊடகங்களின் தாக்கத்தையும் மீறி அறுபது விழுக்காட்டுத் தமிழர்கள், தங்களுக்கு இன-மொழி உணர்வு இருக்கிறதென்று புலப்படுத்தியுள்ளார்கள்.
கருத்துக்களம்
ஓர் ஈழத்தமிழ் சிறுவனின் கடிதம்

தகுண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?
எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்கள விமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
என் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்துவீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் "மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
குழந்தையைக் கிழிக்கும் புத்தகங்கள்

அந்தப் பெற்றோர்கள் எந்த நேரமும் பயமும், பதட்டமுமாகவே இருந்தார்கள்.
என்ன ஆயிற்று அவர்களுக்கு?
குடும்பத்தில் எதாவது பெரிய பிரச்சனையா?
குழந்தைக்கு உடல் நிலை சரியில்லையா?
அதெல்லாம் ஒன்றுமில்லை தங்கள் மகனுக்கு முழு ஆண்டுப் பரீட்சை நெருங்கிவிட்டது. பரீட்சைக்கு தயாராகிறார்கள் பெற்றோர்கள். அவர்களுக்கு வந்திருப்பது பரீட்சை ஜுரம் (Exam Fever)
சிங்களத் தீயில் வெந்து மடியும் தமிழர்கள் - காணொளி
பாவிருந்து
ஈழத்துப் பரணி - பாவலர் முவ. பரணன்
அலைநெளி முடியே அவிழ்ந்தாலும் ஆடையுஞ் சிறிதே குலைந்தாலும்
கொலைச்சின விழியே இமைத்தாலும் கூர்வாள் எதிரியின் மேற்போக்கோம்
என்றதொல் படையொழுங் குள்ளவராம் எதிரிக்கும் இரங்கும் மாண்பினராம்
நின்றவெந் தமழரோ நிலைகெடினும் நீக்குதல் இல்லாப் படைமரபார்!
இந்தியப் பேரரசே நீ சிந்திப்பாயா? - இரா.செம்பியன்
ஒட்டுமொத்தத் தமிழினத்தைச் சுட்டுத் தள்ள
உதவிசெய்து வருகின்றார் சிங்க ளர்க்கே
எட்டுணையும் தமிழினத்தை மதித்தி டாதார்
இறையாண்மை பற்றியிங்கே பேசு கின்றார்
குட்டுகின்றார் குனிகின்றோம் என்ப தாலே
கூடாதே இனிமேலே நிமிர்ந்து நிற்போம்
பட்டிதொட்டி எங்கணுமே விழிப்பு ணர்வைப்
பரப்பிஇற்றை நிலையதனை விளக்கவேண்டும்
உலகத்தமிழர் பக்கம்
‘தமிழ் டயஸ்போறா’ - ‘சிறிலங்கன் டயஸ்போறா’ மலேசிய மாநாட்டில் விவாதம்

புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்களின் தற்போதைய நிலை, எதிர்காலம் குறித்து ஆராயப்பட்ட ஒரு மாநாடு மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் ‘Srilankan Diaspora, the Way Forward’ என்ற தலைப்பில் கடந்த 29 -08 2008ல் இடம்பெற்றது.
சிறிலங்கா அமைப்புகளின் சம்மேளனமும் (FOMSO) மலாயா பல்கலைக்கழகத்தின் இந்திய கற்கை நெறிப் பிரிவும் இணைந்து இம்மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.
மெல்பேன் நகரில் வெற்றிகரமாக நடைபெற்ற அமைதி பேரணி

மெல்பேன் நகரில் இன்று பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 4 மணிவரை கவன ஈர்ப்பு ஊர்வலம் நடைபெற்றது இதில் ஏறத்தாள 700-800 வரையிலான மக்கள் பங்கு பற்றினர்.இந்த ஊர்வலத்தை அவுஸ் இளையோர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது
நகரின் இதயத்தில் இருக்கும் பெடரேசன் சதுக்க்கத்தில் இருந்து விக்ரோரியா பாராளமன்று வரை ஊர்வலமாக சென்ற மக்கள் பாராள மன்றுக்கு முன்னர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மீண்டும் பெடரேசன் சதுக்கத்துக்கு ஊர்வலமாக வந்தனர்.பின் அங்கு சிறப்பு உரைகள் ஆற்றப்பட்டன.
சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் யேர்மனியில் விவாத அரங்கு

"உல்லாசப்பயணிகளின் சொர்க்கமாக விளங்கிவரும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள்" எனும் தலைப்பில் ஜேர்மனியில் உள்ள சுட்காட் நகரில் விவாத அரங்கொன்று கடந்த புதன்கிழமை (29.10.08) மாலை நடைபெற்றுள்ளது.
ஜேர்மனியின் பிரபல அரசியல் கட்சியான சமூக ஜனநாயக கட்சியின் (SPD) பல்கலைக்கழக மாணவர்களுக்கான இளையோர் அமைப்பு (JUSOS) இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.
வினாதல் விடுத்தல்
வினாதல் விடுத்தல் - முனைவர் இரா. திருமுருகன்
1. கடையேழு வள்ளல்களில், பாரி முல்லைக்குத் தேரீந்தான். பேகன் மயிலுக்குப் போர்வையீந்தான். அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி யீந்தான். மற்றையோர் எவற்றை ஈந்து வள்ளல்கள் ஆனார்கள்?
- புலவர் ந. ஞானசேகரன், திருலோக்கி.
தெரியுமா செய்தி?
தமிழர்களாகிய நாம் பூரித்துப்போகின்றோம்!
சந்திரயான் விண்கலத்தின் வெற்றிப்பயணத்தை இன்று உலகமே மூக்கின்மேல் விரல் வைத்து வியந்துகொண்டிருக்கிறது, இந்தியர்களுக்கு மகிழ்ச்சி, தமிழர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி, காரணம் அந்த விண்கலத்தை உருவாக்கியவர் ஒரு தமிழர்.
அவர் பெயர் அண்ணாத்துரை, தந்தை பெயர் மயில்சாமி, பொள்ளாச்சி அருகில் உள்ள கொத்தவாடி என்பது இவர்தம் ஊர், கோவை அரசு பொறியியற் கல்லூரியிற் பயின்று பொறிஞரானவர், பின்னர் விண்வெளி ஆய்வு மேற்கல்வி பயின்று 1982ஆம் ஆண்டு சிறீகரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வுக் கழகத்தில் பணியில் சேர்ந்தார், சந்திரயான் திட்ட இயக்குநராக அண்ணாத்துரை அமர்த்தப்பட்டார், சந்திரயான் விண்கலத்தை வடிவமைத்தார், ஒரு தமிழர் உருவாக்கிய செய்ற்கைக் கோள்தான் முதன்முதலாக நிலவில் ஆழமாக ஊடுருவி நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ளப்போகிறது என்பதில் நாம் பூரித்துப்போகின்றோம்!
கச்சதீவு-'இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க முடியாது'

டெல்லி: கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. அங்கு இந்திய மீனவர்கள் மீன் பிடிக்கக் கூடாது. இருப்பினும், இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க வழி செய்யும் விதமாக இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
ராஜ்யசபாவில் இன்று கேள்வி நேரத்தின்போது சிவராஜ் பாட்டீல் இதுகுறித்து கூறுகையில், இந்திய மீனவர்கள் மீது அடிக்கடி துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது கவலை தருகிறது.
வேண்டுகோள்
தமிழ்க்காவல் படிக்கும் தமிழ்நெஞ்சங்களுக்கு ஒரு வேண்டுகோள்
தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, தமிழ் இனம் ஆகியவற்றின் மேம்பாடு குறித்த கட்டுரைகள், கதைகள், நாடகங்கள், துணுக்குச்செய்திகள் முதலியவற்றைத் ‘தமிழ்க்காவல்’ உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறது.
உங்கள் நண்பர்கள் முதலிய தொடர்புடையவர்களுக்குத் தமிழ்க்காவலின் இணைய முகவரியை அன்புகூர்ந்து தெரியப்படுத்துமாறு வேண்டுகிறோம்.












